அட்சய திருதியை உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை என்பதோடு, இந்த நாள் நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட ஆதாயங்களின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

மேலும், அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள் அதனால் அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை.

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள்படுகின்றது.இந்த ஆண்டு மே 10ம்திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திகதி தொடங்குகிறது.மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.

மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாக பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய மாற்றமடைவதால், நகை வாங்க பலரால் முடியாது. எனவே அதற்கு பதில் வேறு என்னென்ன பொருட்களை வாங்கினால் நல்லது என பார்க்கலாம்.

வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம், புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு மாறாக வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என கூறப்படுகின்றது.