காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவதும் தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருந்த வருகின்றது.காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.

கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காகம் பற்றிய கனவுகளின் பலன்கள்

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது.

கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கனவில் பறக்கும் காகத்தை கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

இது பல பிரச்சனைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணாக்கப்பட வாய்ப்பு காணப்படுகின்றது. அதனை எச்சரிப்பதாகவே இந்த கனவு அமைகின்றது.கனவில் காகத்தை பிடித்திருப்பதை கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல்.

இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என நம்பப்படுகின்றது. காகங்கள் கனவில் தொடர்ந்து தென்பட்டால் பித்துருக் கடவுள்கள் தொடர்பான கர்மங்கள் நீங்கியதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடுகின்றது.