ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பவர்களாகவும் பிறரின் ரகசியங்களை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

(எண் 8) 8,17,26
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விடயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் விவாதிப்பதை விரும்புகின்றார்கள் மற்றவர்களின் உணர்வுகள் குறித்து இவர்கள் அக்கறை செலுத்துவது கிடையாது.

(எண் 5) 5,14,23
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கிசுகிசு பேசும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்களின் வாழ்க்கை தொடர்பிலான வதந்திகளை பரப்புவதில் இவர்கள் வல்லவர்களாக இருக்கின்றனர். இவர்களை எளிதில் நம்பிவிட முடியாது.

(எண் 3) 3,13,21,30
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.இதனால் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

(எண் 9) 9,27,18
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சமூக தொடர்புகளை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்கள் வதந்திகளை பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். பிரச்சினைகளில் உண்மைத்தன்மைக்கு முக்கியதுவம் கொடுக்க மாட்டார்கள்.