Tuesday, May 26, 2026|
Home/Local/எரிபொருள் தொடர்பில் இலங்கை வாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!!

எரிபொருள் தொடர்பில் இலங்கை வாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!!

E
Editor
|29 April 2026 at 14:48

இலங்கைக்குத் தேவையான மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

36,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றியவாறு இந்த கப்பல் வருகை தருவதாகக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்திருந்தது.

இந்த புதிய இறக்குமதிகளுடன், எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags:Local