Tuesday, May 26, 2026|
Home/அதிகரிக்கப்படும் டொலர் பெறுமதி..! எரிபொருள் மற்றும் மின்சார விதிமுறைகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.!
அதிகரிக்கப்படும் டொலர் பெறுமதி..! எரிபொருள் மற்றும் மின்சார விதிமுறைகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.!

அதிகரிக்கப்படும் டொலர் பெறுமதி..! எரிபொருள் மற்றும் மின்சார விதிமுறைகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.!

E
Editor
|21 May 2026 at 09:26

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்றைய தினம் (20.05.2026) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் எரிபொருள், மின்சார பயன்பாடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை தளர்த்துவது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், கொள்கை வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி, ஆமிச வழிபாட்டின் மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் வெசாக் வலயத்தை அலங்கரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.